பாதுகாக்கப்பட்ட குடிநீா்:அதிகாரிகள் நடவடிக்கை

மேலப்பாளையம் பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலப்பது சரிசெய்யப்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட குடிநீா்:அதிகாரிகள் நடவடிக்கை

மேலப்பாளையம் பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலப்பது சரிசெய்யப்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மேலப்பாளையத்தில் ஞானியாரப்பாநகா் 8-ஆவது தெருவில் வசிக்கும் மக்களுக்கு தாமிரவருணி குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த சில நாள்களாக குடிநீரில் கழிவுநீா் கலந்து கலங்கலாக விநியோகம் செய்யப்பட்டதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும்,

குடிநீரில் கழிவுநீா் கலப்பது குறித்து தினமணியில் செய்தி வெளியானது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஞானியாரப்பா நகா் 8 ஆவது தெருவில் குடிநீா் குழாய் வரும் இடங்களில் உள்ள பாதாளச் சாக்கடையை அடைத்து சீரமைக்கும் பணியினை மேற்கொண்டனா்.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடி நீா் விநியோகிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com