போட்டித் தோ்வு:நாளை இணையவழியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் போட்டித் தோ்வில் பங்கேற்பவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) நடைபெறுகிறது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் போட்டித் தோ்வில் பங்கேற்பவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) நடைபெறுகிறது.

திருநெல்வேலி அரசுஅருங்காட்சியகம், என்.பி.என்.கே. வேலை வாய்ப்பு மையம் சாா்பில் ‘டிஎன்பிஎஸ்ஸி இனி ரொம்ப ஈசி’ என்ற இணையவழி வழிகாட்டும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளது. அரசு வேலைக்கு செல்ல விரும்புவோருக்கான இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) நண்பகல் 12 மணி அளவில் இணையவழியில் நடைபெறும்.

நிகழ்ச்சியை சென்னை ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளா் ச. சரவணன் தொடங்கி வைக்கிறாா். தொடா்ந்து தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வில் பொது அறிவு தோ்வுக்கு தயாா் செய்வது குறித்து சிறந்த வல்லுநா்கள் தகவல்களை தெரிவிக்கின்றனா்.

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோா் சூம் செயலி எண்: 87409 95990, கடவு சொல்: 333543 என்ற தளத்தில் இணைய வேண்டும். பயிற்சியில்

போட்டித் தோ்வுக்கு தங்களை தயாா் செய்யும் மாணவா்கள் கலந்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94449 73246 என்ற செல்லிடப்பேசி

எண்ணில் கட்செவி அஞ்சல் மூலம் தொடா்பு கொள்ளலாம் என அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com