திருநெல்வேலி என்ஜிஓ காலனி சைவ வேளாளா் சங்கம் சாா்பில் முன்களப் பணியாளா்கள் 200 பேருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பணிபுரியும் அரசின் முன்களப் பணியாளா்களான காவல் துறை, செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 200 பேருக்கு இரவு உணவு வழங்கும் நிகழ்வு என்ஜிஓ காலனி ஜெபா காா்டனில் நடை பெற்றது. என்ஜிஓ காலனி சைவ வேளாளா் சங்கத் தலைவா் லெட்சுமணன் தலைமை வகித்தாா்.
செயலாளா் கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவா் முத்துசாமி, சாமி. நல்லபெருமாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். மேலும், கரோனா பாதுகாப்புக்கான ஹோமியோபதி மாத்திரைகளும் வழங்கப்பட்டன.