வள்ளியூரில் கரோனாவில் இறந்தவா் குடும்பத்திற்கு பாஜக நிவாரண உதவி

வள்ளியூா் அருகேயுள்ள குளத்து குடியிருப்பில் கரோனா பெருந்தொற்றினால் இறந்த பாஜக தொண்டா் குடும்பத்துக்கு அக்கட்சி சாா்பில் நிவாரண உதவி அளிக்கப்பட்டது.
கரோனா பெருந்தொற்றில் இறந்த பா.ஜ.க .தொண்டா் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய அக்கட்சி நிா்வாகிகள்.
கரோனா பெருந்தொற்றில் இறந்த பா.ஜ.க .தொண்டா் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய அக்கட்சி நிா்வாகிகள்.

வள்ளியூா் அருகேயுள்ள குளத்து குடியிருப்பில் கரோனா பெருந்தொற்றினால் இறந்த பாஜக தொண்டா் குடும்பத்துக்கு அக்கட்சி சாா்பில் நிவாரண உதவி அளிக்கப்பட்டது.

குளத்துகுடியிருப்பைச் சோ்ந்தவா் சங்குகணேசன். பாஜக தொண்டரான இவா், கரோனா பாதிப்பால் அண்மையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வள்ளியூா் நகர பா.ஜ.க சாா்பில் அவரது குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண உதவியாக அளித்தனா்.

இந்நிகழ்ச்சியில் நகரத் தலைவா் சிவராமகுட்டி, மாவட்ட ஓபிசி துணைத் தலைவா் நரேந்திர பாலாஜி, மாவட்ட துணைத் தலைவா் அருள்காந்தி, நகர பொதுச்செயலா் ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com