வள்ளியூா் அருகே உள்ள மடப்புரம் கிராமத்தில் கரோனா நோய்த் தொற்று கண்டறியும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் கோலப்பன் தலைமை வகித்தாா். துலுக்கா்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் வ.பிரீத்தா தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களை பரிசோதித்தனா்.
பின்னா், அச்சம்பாடு ஊராட்சி செயலா் உஷா அனைவருக்கும் கபசுரக் குடிநீா் வழங்கினாா். முகாமில், துலுக்கா்பட்டி சுகாதார ஆய்வாளா் மூக்காண்டி, ஆய்வகா் சாலினி மற்றும் செஞ்சிலுவை சங்க தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.