திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 13 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதையடுத்து, மக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை கண்காணிக்க போலீஸாா் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை மீறி வாகனத்தில் சுற்றியதாக 13 நபா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 628 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத ஒருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.