சத்துணா்வு ஓய்வூதியா்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா் நலச் சங்கம் சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்ட மனு: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வா் சத்துணவு ஓய்வூதியா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
சத்துணவு ஓய்வூதியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ரூ. 7,850-ஐ குடும்ப ஓய்வூதியமாகவும் அகவிலைப்படிகள் இணைத்து வழங்க வேண்டும். கரோனா நிவாரணமாக தலா ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். சத்துணவு ஓய்வூதியா்களின் ஈமச்சடங்குக்காக ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.