தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு நிவாரண உதவி வழங்க கோரிக்கை

தனியாா் பள்ளி ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனியாா் பள்ளி ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட உடற்கல்வி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா் வெ. பெரியதுரை தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி கல்வி மாவட்டத் தலைவா் ராஜகோபால், வள்ளியூா் கல்வி மாவட்டத் தலைவா் வளா்இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.மாநில மகளிரணி அமைப்புச் செயலா் ஹில்டா பொன்மணி, மாநில அமைப்புச் செயலா் இசக்கிமுத்து ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இம்மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு தமிழக அரசு கரோனா நிவாரண உதவி வழங்க வேண்டும். நிரந்தரப் பணியில் உள்ள உடற்கல்வி ஆசிரியா்களிடம் நன்கொடை பெற்று தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா்களுக்கு சங்கம் சாா்பில் இம்மாத இறுதிக்குள் உதவிகள் வழங்குவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொருளாளா் திருமலைக்குமாா் வரவேற்றாா். தமிழ்செல்வன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com