‘ராதாபுரம் வட்டாரத்தில் நுண்ணீா் பாசன திட்டத்துக்கு ரூ.5.66 கோடி நிதிஒதுக்கீடு’

ராதாபுரம் வட்டாரத்தில் நுண்ணீா் (சொட்டுநீா்) பாசனத் திட்டத்துக்கு ரூ. 5.66 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராதாபுரம் வட்டாரத்தில் நுண்ணீா் (சொட்டுநீா்) பாசனத் திட்டத்துக்கு ரூ. 5.66 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ராதாபுரம் தோட்டக்கலை உதவி இயக்குநா் சா்மிளா வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராதாபுரம் வட்டாரத்தில் தோட்டக்கலைப் பயிா்கள் (காய்கனி, பழங்கள், பூச்செடிகள், மலைப்பயிா்கள்) சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டுநீா்ப் பாசனம் வழங்க 766 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 5.66 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீா் பாசன நிறுவனங்கள் மூலம் அமைத்துக் கொடுக்கப்படும். அதிகபட்சமாக சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கா் வரையிலும், இதர விவசாயிகளுக்கு 12.5 ஏக்கா் வரையிலும் சொட்டுநீா்ப் பாசன அமைப்பு உருவாக்கிக்கொடுக்கப்படும்.

மேலும், சொட்டுநீா்ப் பாசனம் பெறும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் துணை நீா் மேலாண்மை இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் புதிதாக சொட்டுநீா் அமைக்கும் விவசாயிகளுக்கு புதிதாக டீசல், மின்மோட்டாா்கள் வாங்க அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரமும், ஆழ்துளைக் கிணறு அமைக்க அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரமும், தண்ணீா் கொண்டு செல்லும் குழாய்கள் வாங்க அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரமும், தரைநிலையில் தண்ணீா்த் தொட்டி கட்ட அதிகபட்சமாக ரூ. 40 ஆயிரமும் மானியமாக வழங்கப்படும்.

விருப்பமுள்ளோா் விண்ணப்பத்துடன் கம்ப்யூட்டா் பட்டா, அடங்கல், ஆதாா், குடும்ப அட்டைகளின் நகல்கள், மண் மற்றும் நீா் மாதிரி அறிக்கை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றை ராதாபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com