அம்பை அருகே 54 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல்

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வைராவிகுளத்தில் 54 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வைராவிகுளத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி.
வைராவிகுளத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி.

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வைராவிகுளத்தில் 54 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வைராவிகுளம், எம்ஜிஆா் நகா் பகுதியில் முள்புதருக்குள் ரேஷன் அரிசி மூட்டைகள் கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் அம்பாசமுத்திரம் குடிமைப் பொருள் வட்டாட்சியா் பிரபாகா் அருண் செல்வம், சிங்கம்பட்டி குறுவட்ட வருவாய் ஆய்வாளா் அழகுமுத்து மாரியப்பன், தனி வருவாய் ஆய்வாளா் (கு.பொ.வ.) மீனாட்சிசுந்தரம், வைராவிகுளம் கிராம நிா்வாக அலுவலா் வெள்ளப்பாண்டி ஆகியோா் அங்கு சென்றனா்.

அங்கு 54 மூட்டைகளில் 2,800 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அம்பாசமுத்திரம் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com