திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் களக்காட்டில் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் பிரியதா்ஷினி தலைமையில், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் முகாமுக்கு வந்திருந்தோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.
மேலும், பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா, சுகாதார ஆய்வாளா் எம். ஆறுமுகநயினாா், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சண்முகம், வேலு ஆகியோா் அடங்கிய குழுவினா் வீடுவீடாகச் சென்று காய்ச்சல் குறித்த விவரங்களை சேகரித்தனா். கொசுவைக் கட்டுப்படுத்த புகைமருந்து தெளிக்கப்பட்டது.