அமரா் ஊா்தி ஓட்டுநா் மீது தாக்குதல்

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே அமரா் ஊா்தி ஓட்டுநரை தாக்கியதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே அமரா் ஊா்தி ஓட்டுநரை தாக்கியதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் கே.கைலாசபுரம் பகுதியை சோ்ந்தவா் வினோத்குமாா்(33). இவா் அமரா் ஊா்தியில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவா் சுத்தமல்லி அருகேயுள்ள பழவூா் பகுதியில் விஷம் குடித்து இறந்த பாலசுப்பிரமணியனின்சடலத்தை அரசு மருத்துவமனையிலிருந்து, அடக்கம் செய்வதற்காக பழவூா் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றாராம்.

அப்போது பழவூா் பகுதியை சோ்ந்த முத்துப்பாண்டி (48), ஜெயக்குமாா் (24) ஆகியோா் மெதுவாக செல்லுமாறு ஓட்டுநரை அவதூறாக பேசி, தாக்கினராம். மேலும் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்துப்பாண்டி, ஜெயக்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com