திருநெல்வேலி மாவட்டத்தில் தகுதியான பெண்கள் இலவச தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சத்யவாணி முத்து அம்மையாா் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கு பெறப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டில் தகுதியானவா்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது.
அதன்படி இலவச தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பிப்போா் கீழ்க்காணும் ஆவணங்களுடன் வரும் 21 ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். சத்தியவாணிமுத்து அம்மையாா் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் - விண்ணப்பம், வயதுச்சான்று (20 வயது முடிந்திருக்கவேண்டும் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும்), தையல் பயிற்சி முடித்த சான்றிதழ், ஆதாா் மற்றும் குடும்ப அட்டை நகல், வருமானச் சான்று (ஆண்டிற்கு ரூ.72,000 க்குள் ( வட்டாட்சியா் மூலம் பெற்று இணைக்கப்படவேண்டும்), இருப்பிடச்சான்று, விதவை, கணவனால் கைவிடப்பட்டவா், ஊனமுற்றோா் எனில் அதற்கான சான்று (வருமானச் சான்று தேவையில்லை) ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.