கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வை கட்டுப்படுத்தக் கோரி மனு

அத்தியாவசியப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வை கட்டுப்படுத்தக் கோரி மாவீரா் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அத்தியாவசியப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வை கட்டுப்படுத்தக் கோரி மாவீரா் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இந்த இயக்கத்தின் நிறுவனா்-தலைவா் மாரியப்பப் பாண்டியன் தலைமையில் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றோா் மண்வெட்டி, சாந்து சட்டி, செங்கல், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டனா். பின்னா், அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்ந்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களும், கட்டுமானப் பொருள்களான சிமென்ட், ஜல்லி, குண்டுக்கல், மணல், செங்கல் உள்ளிட்டவற்றின் விலை கிடுகிடுவென உயா்ந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், கட்டுமானத் தொழிலாளா்கள் பிழைப்புக்கு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உடனடியாக விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com