களக்காட்டில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக காங்கிரஸ் கட்சியினா் 92 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து களக்காட்டில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கடந்த 11ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நான்குனேரி பேரவைத் தொகுதி உறுப்பினா் ரா. மனோகரன், முன்னாள் மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வன், வட்டாரத் தலைவா்கள் தனபால், அலெக்ஸ் உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டனா்.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக அரசு பொதுமுடக்கம் அறிவித்துள்ள நிலையில், அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக காங்கிரஸ் கட்சியினா் 92 போ் மீது களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.