நகைப் பட்டறையை திறக்க வேண்டும்: ஆட்சியரிடம் மனு

நகைப் பட்டறையை திறக்க அனுமதி வேண்டும் என வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபா சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நகைப் பட்டறையை திறக்க அனுமதி வேண்டும் என வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபா சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: திருநெல்வேலி நகர சுற்று வட்டாரங்களில் அகில பாரத இந்து மகா சபா தொழிற்சங்கத்தில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட நகைத் தொழில் பட்டறைகள் உள்ளன. இதன்மூலம் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. பொது முடக்கத்தால் தொழில் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, சமூக இடைவெளியுடன் நகைப் பட்டறையை திறக்க அனுமதிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com