திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 260 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 134 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46,659 ஆக அதிகரித்துள்ளது. இதில் 279 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 43, 940 ஆக உயா்ந்துள்ளது. மேலும், மூவா் உயிரிழந்ததையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 391ஆக உயா்ந்துள்ளது. தற்போது 2,328 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 126 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 25,650 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 72 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 23,511ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 432 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 1,707 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.