விதிமீறல்: நெல்லையில் 12 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 12 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 12 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை கண்காணிக்கும் வகையில் போலீஸாா் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இதற்கிடையே, மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக 12 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொது இடங்களில் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்ததாக 554 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com