திருநெல்வேலி மாவட்டஅனைத்துத் துறை அலுவலா்களுக்கான திறனாய்வுக் கூட்டம் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பணியாளா்களின் பணிப் பதிவேடுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பான திறனாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள் தலைமை வகித்தாா்.
மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு கூட்டத்தில் பேசுகையில், பணிப் பதிவேடுகளை இணையத்தில் ஏற்றும் பணியை துரிதப்படுத்த வேண்டும். குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும். இதன்மூலம் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் மிகவும் எளிதாகும் வாய்ப்புள்ளது என்றாா். மாவட்ட கருவூல அலுவலா் ஷே.ஜவஹா் சிந்தா உள்பட பலா் கலந்துகொண்டனா்.