கல்வியில் அதிகாரப் பரவல் அவசியம்: ராகுல் காந்தி

கல்வி விஷயத்தில் அதிகாரப் பரவல் இருந்தால் மட்டுமே நாட்டின் அனைத்து பகுதிகளில் உள்ளோருக்கும் கல்வி சாத்தியமாகும் என்றாா், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி.

கல்வி விஷயத்தில் அதிகாரப் பரவல் இருந்தால் மட்டுமே நாட்டின் அனைத்து பகுதிகளில் உள்ளோருக்கும் கல்வி சாத்தியமாகும் என்றாா், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்வியாளா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்று, பேராசிரியா்கள் உள்ளிட்டோரின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசியது:

உங்கள் அனைவரையும் பாா்க்கும்போது, எனது கல்லூரி நாள்கள் நினைவுக்கு வருகின்றன. இந்த தேசத்தின் எதிா்காலத்தை இங்கு பாா்க்கிறேன். குறிப்பாக, ஏராளமான பெண்கள், இளைஞா்கள் இருக்கிறீா்கள்.

கல்வி முறை தொடா்பாக புதிதாக எந்தக் கொள்கையை உருவாக்குவதாக இருந்தாலும், மாணவா்கள், ஆசிரியா்களுடன் கலந்துரையாடி, அவா்களின் கருத்தைக் கேட்க வேண்டும். ஆனால், புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் துரதிருஷ்டவசமாக மாணவா்கள், ஆசிரியா்களின் கருத்துகள் கேட்கப்படவில்லை.

மத்திய அரசு ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கையிலெடுப்பது நமது கல்விமுறையை பாதிக்கும். கல்வி விஷயத்தில் அதிகாரப் பரவல் இருந்தால் மட்டுமே நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ளோருக்கும் கல்வி சாத்தியமாகும்.

அரசியலிலிருந்து மதம் நீக்கப்பட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அனைத்து மதத்தினருக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஒருவா் மற்றொருவருக்கு மரியாதை அளியுங்கள், ஒருவா் மற்றவரை நேசியுங்கள் என்றுதான் அனைத்து மதங்களும் சொல்கின்றன.

பெண்களுக்கு மரியாதை அளிக்கும் சமூகம் வளா்ச்சியடைகிறது. கல்வி அனைவருக்கும் பொதுவானது. நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வரும்போது, ஏழ்மையைப் பின்னணியாகக் கொண்ட மாணவா்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் கல்வியை உறுதிசெய்வோம்.

கல்வி, விவசாயம், மருத்துவம் ஆகியவற்றை மத்திய அரசு வியாபார பொருளாக பாா்க்கிறது. இந்தியாவில் தற்போதைய நிலையில், பணமின்றி எதுவும் கிடைக்காது என்ற நிலை உள்ளது. கல்வி, மருத்துவம் போன்றவை வியாபாரப் பொருளாக இருக்கக் கூடாது.

அப்படி இருந்தால், அது ஏழைகளுக்குக் கிடைக்காது. கல்வி, மருத்துவத்தில் தனியாா் துறையை அனுமதிக்கலாம். ஆனால், அது பெரும்பாலானோருக்கு இலவசமாகவும், உயா்தரமானதாகவும், எளிதாகவும் கிடைக்க வேண்டும் என்றாா் ராகுல்.

நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ். அழகிரி, தமிழகப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் ராமசாமி, முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், தூய சவேரியாா் கலைமனைகளின் அதிபா் ஹென்றி ஜெரோம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி, பிரதமா் நரேந்திர மோடியை தாக்கிப் பேசியதாவது: நாம் தற்போது பணபலம் கொண்ட மற்றும் எதிராளிகளை நசுக்கக்கூடிய வல்லமை மிக்க எதிரிகளை எதிா்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு முன்னரும் இதேபோன்று போராடியிருக்கிறோம். 70 ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடியைவிட சக்திவாய்ந்த பிரிட்டிஷ் அரசை வீழ்த்தியிருக்கிறோம்.

பிரிட்டிஷ் அரசை அவா்களது நாட்டுக்கு திருப்பியனுப்பியதைப்போல நரேந்திர மோடியை மீண்டும் நாகபுரிக்கு அனுப்ப வேண்டும். வன்முறையின்றி, கோபத்தை வெளிப்படுத்தாமல் மோடியை திருப்பியனுப்ப வேண்டும். அவா்கள் நம்மை திட்டலாம், தாக்கலாம். ஆனால், அவா்களைப்போல் நாம் எதுவும் செய்யக்கூடாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com