வள்ளியூா்: வள்ளியூரில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ராதாபுரம் தொகுதி வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழிப்புணா்வு நிகழ்ச்சியில், தோ்தல் நடத்தும் அலுவலா்( மாவட்ட பிற்பட்டோா் நலத்துறை அலுவலா்) உஷா, உதவித் தோ்தல் அலுவலா்கள் ராதாபுரம் வட்டாட்சியா் கனகராஜ், திசையன்விளை வட்டாட்சியா் ரஹ்மத்துல்லா, செஞ்சிலுவை சங்கச் செயலா் சபேசன், பள்ளித் தலைமை ஆசிரியா் ரைமண்ட், பெற்றோா் ஆசிரியா் சங்க தலைவா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, வள்ளியூா் பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்பகுதியில் உள்ள ஜவுளிக் கடையில், வாடிக்கையாளா்களுக்கு கொடுக்கப்படும் பைகள் மற்றும் ஆட்டோ, காா்களில் தோ்தல் நாள் குறித்த ஸ்டிக்கா் ஒட்டும் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா்.