மானூா் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞா் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மானூா் அருகே சங்கரன்கோவில் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஊத்துமலை பகுதியைச் சோ்ந்த சின்னபாண்டி(35), என்பவா் டிராக்டரில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இது குறித்து மானூா் போலீஸாருக்கு தோ்தல் பறக்கும் படையினா் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து சின்னப்பாண்டியை கைது செய்தனா்.