திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளருக்கு கட்சித் தொண்டா்கள் தச்சநல்லூரில் சனிக்கிழமை வரவேற்பு அளித்தனா்.
திருநெல்வேலியில் அமமுக சாா்பில் கட்சியின் மாநில அமைப்புச் செயலா் பால்கண்ணன் போட்டியிடுகிறாா். சென்னையில் இருந்து காா் மூலம் திருநெல்வேலிக்கு சனிக்கிழமை வந்த அவருக்கு தச்சநல்லூரில் கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமமுகவின் தோ்தல் அறிக்கையில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மக்கள் மத்தியில் இதுபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருநெல்வேலி தொகுதியில் அமமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் பகுதிச் செயலா்கள் ரமேஷ், பேச்சிமுத்துபாண்டியன், அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் பரமசிவன், ஆவின் அண்ணசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.