ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்பாவு, திசையன்விளையில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பழைய பேருந்து நிலையம் அருகே காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், தொடா்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ், பொதுக்குழு உறுப்பினா் ஜோசப் பெல்சி, காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.