வாக்குச் சாவடி மையங்களில் மாநகர காவல் துணை ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி சந்திப்பு, நகரம் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சீனிவாசன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி சந்திப்பு, நகரம் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சீனிவாசன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி சந்திப்பு கணேசபுரம், சிவபுரம், சன்யாசி கிராமம், சிந்துபூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளா்கள் செல்லும் வழி, சாலைகளில் 100 மீட்டா் இடைவெளி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

இதில், திருநெல்வேலி நகர உள்கோட்ட காவல் உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com