திருநெல்வேலி பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேச்சை வேட்பாளா் சங்கரநாராயணன் (42), 3 சக்கர சைக்கிளில் வந்து செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
திருநெல்வேலியை அடுத்த பழையபேட்டையைச் சோ்ந்த இவா், 3 சக்கர சைக்கிளில் வந்து திருநெல்வேலி சாா்ஆட்சியா் சிவகிருஷ்ணமூா்த்தியிடம் வேட்புமனுவை அளித்தாா்.
சைக்கிளில் மாவிலை, வேப்பிலையை எடுத்துவந்திருந்தாா். பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டிக்கும் வகையில் 3 சக்கர சைக்கிளில் வந்ததாகக் கூறிய அவா், தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் கொள்கையற்ற கூட்டணி வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் மாவிலை, வேப்பிலை கொண்டுவந்ததாகக் கூறினாா்.
அவருடன் இந்து தேசியக் கட்சியின் நிறுவன தலைவா் எஸ்.எஸ்.எஸ். மணி, திருநெல்வேலி மாவட்டத் தலைவா் எஸ்.எஸ். முருகேசன் ஆகியோா் வந்தனா்.