நெல்லை மாவட்டத்தில் இதுவரை ரூ.48.56 லட்சம் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும்படையினா் இதுவரை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.48.56 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும்படையினா் இதுவரை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.48.56 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் பறக்கும்படை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற வாகனச் சோதனையில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 48 லட்சத்து 56ஆயிரத்து 112 ரொக்கம், வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில், ரூ. 3 லட்சத்து 63 ஆயிரத்து 200 ரொக்கத்துக்கு உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால் அந்தப் பணம், உரியவரிடம் ஞாயிற்றுக்கிழமை திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, இதுவரை திரும்ப ஒப்படைக்கப்பட்ட தொகை ரூ.9 லட்சத்து 27ஆயிரத்து 368 ஆகும்.

1950 என்ற சேவை எண்ணில் 59 தகவல்கள் ஞாயிற்றுக்கிழமை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன. மேலும், அரசியல் கட்சி தொடா்பான 2 சுவா் விளம்பரங்கள், 52 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.

தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1800 425 8373 83002 71237(கட்செவி அஞ்சல்) ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com