அதிமுக-பாஜக கூட்டணி வெற்றிபெற்றால் ஏழை, எளியோருக்கான அனைத்துத் திட்டங்களும் விரைந்து செயல்படுத்தப்படும் என்றாா், திருநெல்வேலி பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன்.
அவா், திருநெல்வேலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா். மாநகராட்சியின் 42, 43ஆவது வாா்டு பகுதிகளில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தாா். மேலும், கரிக்காத்தோப்பு, இடகரை, சொக்கட்டான்தோப்பு, ஞானம்மாள்கட்டளை, சுத்தமல்லி, தென்பத்து, ராஜவல்லிபுரம், பாலாமடை, குப்பக்குறிச்சி, அலங்காரப்பேரி பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
அதிமுக-பாஜக கூட்டணி வெற்றிபெற்றால் முதியோா் உதவித்தொகையை அதிகரிப்பது உள்ளிட்ட ஏழை, எளியோருக்கான அனைத்துத் திட்டங்களும் விரைந்து செயல்படுத்தப்படும் என்றாா்.
அதிமுக மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், மாவட்ட அவைத் தலைவா் பரணிசங்கரலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.