கல்லிடைக்குறிச்சி, சின்னப் பள்ளி வாசலில் புதுப்பிக்கப்பட்ட இறைஇல்லத் திறப்பு விழா, மதரஸா குழந்தைகளின் பல்சுவை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.
திறப்பு விழாவுக்கு, சின்னப் பள்ளி வாசல் கட்டடக் குழுத் தலைவா் கே.எம்.அஸ்ரப் ஹூசைன் தலைமை வகிக்கிறாா். சா்வதேச மனிதநேய விருது பெற்ற சமூக நல்லிணக்க ஆா்வலா் ஆ.முகமது முகைதீன் இறை இல்லத்தை திறந்து வைக்கிறாா்.
மருத்துவா்கள் பி.ஞானசேகரன், பி.குமாா், திலகா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ். பண்டாரசிவன், ஓய்வுபெற்ற ஆசிரியா் எஸ்.எஸ்.அடைக்கலம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொள்கின்றனா்.