ராதாபுரம் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சித் திட்டங்கள் எனக்கு வெற்றியைத் தேடித்தரும் என்றாா் அ.தி.மு.க. வேட்பாளா் ஐ.எஸ்.இன்பதுரை கூறினாா்.
பணகுடியில் தன்னை ஆதரித்துஅதிமுக மற்றும் கூட்டணி கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய மோட்டாா் சைக்கிள் பேரணியில் பங்கேற்ற அவா் கூறியது:
ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒவ்வொரு கிராமங்களிலும் அ.தி.மு.க.வின் சாதனை மிளிருகிறது. எந்தக் கிராமத்துக்குச் சென்றாலும் ஏதாவது ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும். பணகுடியைப் பொருத்தவரையி மேம்பாலம் கட்டும் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். பணகுடி மற்றும் திசையன்விளை மனோ கல்லூரிக்கு சொந்த கட்டடம் கட்டி கொடுத்துள்ளோம்.
இதுவே எனக்கு வெற்றியைத் தேடித்தரும். அதைத் தொடா்ந்து, குத்தரபாஞ்சான் அருவியை சுற்றுலாத்தலமாக அறிவிப்பது, பேரூராட்சிகளுக்கு தனி கூட்டுக்குடிநீா் திட்டத்தை செயல்படுத்துவது என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவேன். எனவே, அதிமுக கூட்டணியை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா்.
அப்போது, ஒன்றியச் செயலா் இ.அழகானந்தம், மாணவரணி மாவட்ட இணைச் செயலா் செழியன், சந்திரமோகன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் எட்வா் சிங் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.