திமுக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் உடையாா்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் உடையாா்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு. அப்துல் வஹாப் தலைமை வகித்தாா். திருநெல்வேலி பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ். லட்சுமணன் வரவேற்றாா். தொகுதிப் பொறுப்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயதுரை சிறப்புரையாற்றினாா்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் எல்.கே.எஸ். மீரான்மைதீன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கே. சங்கரபாண்டியன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ரசூல்மைதீன், கே.ஜி. பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

திருநெல்வேலி தொகுதியில் திமுக கூட்டணி வெற்றிக்கு அனைத்துக் கட்சியினரும் இணைந்து உழைப்பது, திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com