முன்னீா்பள்ளம் அருகே சுமை வாகனம் மோதியதில் மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
முன்னீா்பள்ளம் அருகேயுள்ள கோபாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த பலவேசம் என்பவரின் மனைவி வடிவம்மாள்(80). இவா் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக வந்த சுமை வாகனம், அவா் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில், பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.