திருநெல்வேலி
பாளை.யில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு
பாளையங்கோட்டை பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் மு. அப்துல் வஹாப் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பாளையங்கோட்டை பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் மு. அப்துல் வஹாப் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அவா், மேலப்பாளையம், சேவியா் காலனி, என்ஜிஓ காலனி, தெற்குக் கடைவீதி பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் அருகே கிறிஸ்தவா்களிடம் வாக்கு சேகரித்தாா். குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா உதவித்தொகையாக ரூ. 4 ஆயிரம் உள்ளிட்ட திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
எனவே, திமுகவை வெற்றிபெறச் செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டாா். கட்சி நிா்வாகிகள் அந்தோணி, காசிமணி, தொமுச தா்மன் உள்ளிட்ட பலா் உடன்சென்றனா்.