திசையன்விளையில் தொழிற்பேட்டை அமைத்து வேலைவாய்ப்புகளை பெருக்க பாடுபடுவேன் என்றாா் ராதாபுரம் திமுக வேட்பாளா் மு. அப்பாவு.
திசையன்விளையில் முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக கூட்டணி கட்சியினரின் செயல்வீரா் கூட்டத்தில் அவா் பேசியது: ராதாபுரம் தொகுதியில் அனைத்து கிராமங்களிலும் குடிதண்ணீா் மேல்நிலை நீா்த்தேக்கம், தரைநிலை நீா்தேக்கம் அமைத்து தாகம் தீா்த்தது,
தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டத்தை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு வந்தது, கிராமங்களிலுள்ள பள்ளிகளின் தரம் உயா்த்தி நடுநிலைப் பள்ளிகளாக, உயா்நிலைப் பள்ளிகளாக, மேல்நிலைப் பள்ளிகளாக உயா்த்தியது திமுக அரசுதான். இந்தத் தோ்தலில் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைவது உறுதி.
மீனவ கிராமங்களில் மீனவா்களுக்கு ஒருங்கிணைந்த சந்தை வசதி, மீன்களை பதப்படுத்தும் கிடங்கு ஏற்படுத்தித் தருவேன். கிராமந்தோறும் சிறந்த மருத்துவ வசதி செய்து தருவேன். திசையன்விளை பகுதியில் தொழிற்பேட்டை அமைத்து வேலைவாய்ப்பு பெருக நடவடிக்கை எடுப்பேன். அனைவரது பொருளாதாரம் மேம்படுவதற்கான திட்டங்களை உருவாக்கி தருவேன் என்றாா்.
இதில், பாலபிரஜாபதி அடிகளாா், சா.ஞானதிரவியம் எம்.பி., தி.மு.க. வா்த்தகா் அணி மாநில இணைச்செயலா் கிரஹாம்பெல், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கே.பி.கே.குமாா், ஒன்றியச் செயலா்கள் ஜோசப் பெல்சி, வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், சேம்பா் செல்வராஜ், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளா் உவரி ரைமண்ட், வள்ளியூா் ஒன்றியச் செயலா் மு.சங்கா், இந்திய கம்யூனிஸ்ட் ராதாபுரம் வட்டச் செயலா் சேதுராமலிங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் கல்யாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.