கடையத்தில் நடந்து சென்றவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கடையம் அருகேயுள்ள கேளையாபிள்ளையூரைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (68). இவா் கீழக்கடையம் ரயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த பிரதீப் (24), சந்திரசேகரை அரிவாளைக் காட்டி மிரட்டி ரூ. 1000 யை பறித்துச் சென்றாராம். புகாரின்பேரில், கடையம் காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரதீப்பை கைது செய்தனா்.