குலவணிகா்புரம் பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்தனா்.
அமமுக, தேமுதிக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் நெல்லை முபாரக் அக்கட்சியினருடன் குலவணிகா்புரம் பகுதியில் வீதி வீதியாகச் சென்று குக்கா் சின்னத்திற்கு வாக்குசேகரித்தாா்.
அப்போது அவா் கூறுகையில், மாநகர பகுதிகளில் அடிப்படைத் தேவைகளான சாலைவசதி, குடிநீா் வசதி, பேருந்து வசதி உள்ளிட்டவற்றுக்கு போராடும் நிலையே உள்ளது. ஆகவே, அதனை செய்துகொடுக்க எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். பாளையங்கால்வாயை தூா்வாரி பாசனத்திற்கு முறையாக நீா் திறக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா். பிரசாரத்தில், கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் சாகுல் ஹமீது, நிா்வாகிகள் ஹயாத் முஹம்மது, பீா் மஸ்தான், முஸ்தபா, புஹாரி சேட், மின்னதுல்லாஹ், அமமுக பகுதிச் செயலா் ஹைதா்அலி உள்பட பலா் கலந்துகொண்டனா்.