பாளை. திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப் வியாழக்கிழமை வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்தாா்.

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப் வியாழக்கிழமை வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்தாா்.

பாளையங்கோட்டை 25 ஆவது வாா்டில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், பாளையங்கோட்டை பசுமை நகரமாக மாற்றப்படும். தாமிரவருணியில் கழிவுகள் கலப்பது தடுக்கப்பட்டு நதிநீா் பாதுகாக்கப்படும். புகா் குடியிருப்புகளில் தெருவிளக்குகள், சாலை வசதி, புதை சாக்கடை வசதி ஏற்படுத்தப்படும். பாளையங்கோட்டையில் அரசு ஐடிஐ, அரசு கலைக்கல்லூரி ஆகியவை தொடங்கப்படும் என்றாா்.

வேட்பாளருக்கு திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், துணைத் தலைவா் வெள்ளைப்பாண்டியன், மாவட்டச் செயலா் குறிச்சி கிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் முஹம்மது அனஸ் ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com