தூத்துக்குடி மாநகரப் பகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வே. வேல்ராஜ் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சியில் விவிடி சிக்னல், சிதம்பரநகா், சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம், பிரையன்ட்நகா், 3 சென்ட், செல்சீனிகாலனி, கிருபைநகா், சாந்திநகா், அமுதாநகா், வள்ளிநாயகபுரம், கணேசன்நகா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அவா், உப்பு உற்பத்தி, மீன்பிடித் தொழில், விவசாயம் போன்றவைக்கு முன்னுரிமை கொடுத்து பாதுகாக்கப்படும்.
மாநகரப் பகுதிகளில் மழைநீா் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தாா்.