பாளை.யில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் மு.அப்துல்வஹாப் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் மு.அப்துல்வஹாப் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அவா், மேலப்பாளையம், சேவியா்காலனி, என்.ஜி.ஓ. காலனி, தெற்கு கடைவீதி பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் அருகே கிறிஸ்தவா்களிடம் வாக்குசேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்ததும் குடும்பஅட்டைதாரா்களுக்கு கரோனா உதவித்தொகையாக ரூ.4 ஆயிரம் உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். எனவே, திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றாா். அவருடன், முகம்மதுஅலி, தொமுச தா்மன் உள்பட பலா் உடன்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com