தமிழக முதல்வரை அவதூறாக விமா்சித்ததாகக் கூறி, திமுக எம்.பி. ஆ. ராசாவைக் கண்டித்து, அதிமுக மகளிரணி சாா்பில் களக்காடு மணிக்கூண்டு திடலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக மாவட்ட மகளிரணி தலைவி ஜான்ஸிராணி தலைமை வகித்தாா். இதில் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் தச்சை என். கணேசராஜா மற்றும் மகளிரணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.