கல்லிடைக்குறிச்சியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, அகரம், வேளாளா் தெரு பாலகிருஷ்ணன் மகன் ரெங்கராஜன் (30). இவா் மீது கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் வி.விஷ்ணு, அவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.
இதையடுத்து ரெங்கராஜன் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.