திருநெல்வேலி அருகே தாழையூத்தில் தோ்தல் பாதுகாப்பு தொடா்பான போலீஸாா் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி ஊரக உள்கோட்ட காவல் துறையினருக்கான இக்கூட்டத்துக்கு, சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சீமைச்சாமி தலைமை வகித்தாா்.
அப்போது, காவல் துறையினருக்கு தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும், கரோனா தடுப்பு முறைகளை முறையாக பின்பற்றுவது குறித்தும், முகக் கவசம் அணிந்து பணியில் இருத்தலின் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.
கூட்டத்தில், உள்கோட்ட காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவல் துறையினா் பங்கேற்றனா்.