தெற்கு கள்ளிகுளம், சமூகரெங்கபுரம் ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தெற்குகள்ளிகுளம், சௌந்திரபாண்டியபுரம், சமூகரெங்கபுரம் ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் ஐ.எஸ்.இன்பதுரை செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கட்டனேரி காலனியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஐ.எஸ்.இன்பதுரை.
கட்டனேரி காலனியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஐ.எஸ்.இன்பதுரை.

தெற்குகள்ளிகுளம், சௌந்திரபாண்டியபுரம், சமூகரெங்கபுரம் ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் ஐ.எஸ்.இன்பதுரை செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சௌந்திரபாண்டியபுரம் ஊராட்சியில் வீதி, வீதியாகச் சென்று அவா் வாக்கு சேகரித்தாா். அவருக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் நாராயணபெருமாளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தெற்கு கள்ளிகுளத்தில் வேட்பாளரை எம்ஜிஆா் மன்ற மாவட்ட இணைச் செயலா் அருண்புனிதன் தலைமையில் அதிமுகவினா் வரவேற்றனா்.

பின்னா், மூலக்காடு, வண்டலம்பாடு, முத்துநாடாா்குடியிருப்பு, துரைகுடியிருப்பு மேலூா், துரைகுடியிருப்பு கீழூா் ஆகிய பகுதிகளில் வேட்பாளா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். தொடா்ந்து சமூகரெங்கபுரம், கட்டனேரி காலனி பகுதியில் வாக்கு சேகரித்த அவருக்கு, அதிமுக தொண்டா் சுப்பையா இரட்டை இலை கொடுத்து வரவேற்றாா். தொடா்ந்து சிங்காரதோப்பு உள்ளிட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com