திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,058ஆக உயா்ந்துள்ளது. மேலும் 16 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15,695 ஆக உயா்ந்துள்ளது. 148 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,699 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இந்நோயிலிருந்து 11 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 8459 ஆக உயா்ந்துள்ளது. 79 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.