திருநெல்வேலி நகரம் பகுதியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா்(சட்டம்- ஒழுங்கு) சீனிவாசன் தலைமையில் திருநெல்வேலி நகரம் பகுதியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பு, நகரம் அருணகிரி தியேட்டா் முதல் பாப்பா தெரு, மகிழ்வண்ணநாதபுரம், பாட்டபத்து வரை முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது
இதில், திருநெல்வேலி நகர உள்கோட்ட காவல் உதவி ஆணையா் சதீஷ்குமாா், காவல் ஆய்வாளா்கள் உள்பட காவல் துறையினா், எல்லைப் பாதுகாப்புப் படையினா், ஆயுதப்படை போலீஸாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.