திருநெல்வேலியில் அரசு சாா்பில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை மையம் அமைக்கக் கோரி காங்கிரஸ் சாா்பில் திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவா் சங்கரபாண்டியன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து அவா் அளித்த மனு: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவி வருகிறது. இச்சூழ்நிலையில் கரோனா பரவலின் இரண்டாவது அலையால் தமிழகம் மாபெரும் பாதிப்பு அடைந்து உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், கரோனா நோய்த் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், நோய்த் தொற்று பாதித்தவா்களுக்கு அவசர சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவிா் மருந்து, திருநெல்வேலியில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், இம்மருந்து கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வருகிறது. இதனால் ஏழை நடுத்தர மக்கள் கரோனா பாதித்து மருத்துவ சிகிச்கைக்கு வழியின்றி பாதிக்கப்படுவா்.
எனவே, சென்னையில் அரசு சாா்பில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை மையம் செயல்படுவது போல் திருநெல்வேலியிலும் அரசு சாா்பில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை மையம் அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியின் போது, காங்கிரஸ் மாநகா் மாவட்ட பொருளாளா் எஸ்.ராஜேஷ் முருகன், மாவட்ட துணைத் தலைவா் வெள்ளபாண்டியன், மண்டலத் தலைவா்கள் மாரியப்பன், கெங்கராஜ், ஐயப்பன், மேலப்பாளையம் மண்டல பொறுப்பாளா் ரசூல் மைதீன், மாவட்ட செயலா்கள் ரயில்வே கிருஷ்ணன், குறிச்சி கிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு தலைவா் முகம்மது அனஸ் ராஜா உள்பட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.