திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை பல்கலைக் கழக துணைவேந்தா் கா. பிச்சுமணி தொடங்கி வைத்தாா். முகாமில், பல்கலைக் கழகப் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதில், பல்கலைக் கழக பதிவாளா் (பொறுப்பு) மருதகுட்டி, பல்கலைக் கழக ஹெல்த் சென்டா் இயக்குநா் ஸ்ரீநிவாஸ், வளாக மேம்பாட்டு இயக்குநா் சேது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.