திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலி நகரம் எண்ணாயிரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கிராஜ் மகன் பேச்சிவேல் (24). இவா், மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால் இவரை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து மாநகர காவல் ஆணையா் அன்பு உத்தரவின்பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.