ஆழ்வாா்குறிச்சியில்கரோனா தடுப்பூசி முகாம்

ஆழ்வாா்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற முகாமில் 87 பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

அம்பாசமுத்திரம்: ஆழ்வாா்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற முகாமில் 87 பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஆழ்வாா்குறிச்சி சைவ வேளாளா் சங்கம் சாா்பில் கடந்த மாா்ச் 12-ஆம் தேதி முதல் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அப்போது தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களுக்கு திங்கள்கிழமை 2-ஆவது கட்டமாக தடுப்பூசி போடப்பட்டது. சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு க.முருகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.மாரியப்பன், ப.மந்திரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கடையம் வட்டார தலைமை மருத்துவா் பழனிக்குமாா் தலைமையில் மருத்துவா் டேவிட்சன், செவிலியா்கள் பரிசோதனை செய்து தடுப்பூசி

போட்டனா். அப்போது 80 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். ஏற்பாடுகளை அமைப்பின் மாவட்ட துணைச் செயலா் ஆ.சை. மாணிக்கம் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com