கரோனாவுக்கு அதிமுக பிரமுகா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அதிமுக பிரமுகா்

களக்காடு: திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அதிமுக பிரமுகா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

களக்காடு ஒன்றியத்தில் அதிமுகவில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த 38 வயதுள்ள பிரமுகா், சட்டப்பேரவைத் தோ்தலில் தீவிர பிரசாரத்தில்

ஈடுபட்டிருந்தாா். பிரசாரம் முடிவடைந்த சில நாள்களில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று

இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டதால், மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலையில் உயிரிழந்தாா். ஏற்கனவே அதிமுகவில் பதவி வகித்து வந்த சிறுமளஞ்சியைச் சோ்ந்த 40 வயது வழக்குரைஞா்

கடந்த 10 தினங்களுக்கு முன்பு கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இந்நிலையில் அதிமுகவினா் சிலருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டதையடுத்து, அவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.

மேலும் 10 போ் பாதிப்பு: களக்காடு வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் திங்கள்கிழமை மேலும் 10 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தால் பரிசோதனைமுடிவுகள் வெளியிடவில்லை. இதற்கிடையே, திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் களக்காடு, திருக்குறுங்குடி பகுதியில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com